மாநாடு 12 June 2025
லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க பல வழிகளை தேடிப்பார்த்து தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் பங்கேற்று தனது அடிப்படைக் கடமையாக ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக வந்த மாபெரும் சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இந்தச் சட்டத்தின் நோக்கம் அரசாங்க பணியாளர்கள் பண்ணையார்கள் போல நடந்து கொண்டு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அரும்பெரும் மதிப்பிற்குரிய மக்களை அலைக்கழிப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், ஒவ்வொரு தனி ஒருவனும் தடைகளை நொறுக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை அதன் வலிமையை சிதைக்கும் வேளையில் அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டு பணியாற்றும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை பல தகவல்களை சமூக ஆர்வலர்கள் கேட்கும்போது அரசு அலுவலகங்களில் இருந்து பொது தகவல் அலுவலர்கள் கொடுக்கும் பதில் என்ன என்று தெரியுமா? கேள்வி எழவில்லை, இது மூன்றாம் நபர் தகவல் , தனிநபர் தகவலை தரத் தேவையில்லை இதனை வாங்கிக் கொண்ட முதல் முதலில் புதிதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும் சமூக ஆர்வலர்கள் இந்தச் சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது போல இருக்கிறது இதெல்லாம் வீண் வேலை என்று ஒதுங்கி விடுவது ஊழல்வாதிகளுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்ட சூழலில் எங்களைப் போன்றவர்கள் சட்டத்தை கொண்டு ஊழல் செய்யும் சதிக்காரர்களின் கொட்டத்தை அடக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், மேடைகளில் , பொதுத்தளங்களில், ஊடகங்களில் என பலவேறு தளங்களிலும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறோம் அதற்காக முழு நேரமும் அரசியல் மாநாடு செய்தி குழுமம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறது என்பது நம்மை பின்பற்றும் பலருக்கும் தெரியும் அதனால் தான் பல கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பதிவு தபாலில் நமது அலுவலகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வலிமையை நிலை நிறுத்தி காட்டுவதற்காக சமீப காலமாக நாமே நேரடியாக மனுக்களை நமது குழுக்களை வைத்து தயார் செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய அதிகாரிகளை அடையாளப்படுத்தி காட்டுவதற்காக முழு வீச்சோடு இறங்கி இருக்கிறோம் இதனை படிக்கும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அத்தனை பேரும் பெரும் நம்பிக்கை கொண்டிருங்கள் திட்டம் போட்டு திருடும் கூட்டத்தை சட்டத்தின் துணை கொண்டு அடக்க முடியும் என்பதை நாம் நிரூபிப்போம் பல சட்டங்கள் இருக்கிறது நாம் தான் அறிய மறுக்கிறோம் அல்லது மறக்கிறோம் அதே போல ஒன்றுதான் கீழே உள்ள செய்தியும் அதாவது நாம் ஒரு தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் வாயிலாக தகவலாக கேட்டால் அதற்கு நகைச்சுவை நடிகர் போல புரியாதது போலவே தகவல் தந்து தப்பிக்க நினைக்கும் தகவல் அதிகாரிகள் மீது எங்களுக்கு சரியான தகவலை நீங்கள் தரவில்லை இந்த அதிகாரி தரவில்லை என்று நீதிமன்றம் செல்லும்போது முன்பொரு காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு அரசு வழக்கறிஞர் அரசின் நிதியிலிருந்து சம்பளத்தை பெறுபவர் வாதாடி வந்த நிலை இருந்தது ஆனால் மக்களை ஏமாற்றும் நோக்கில் அலைக்கழித்து அலட்சியமாக தகவல் தரும் தகவல் அலுவலர்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் இனி வாதாட மாட்டார்கள் அவர்களே சொந்த பணத்தில் வழக்கறிஞர்களை வைத்து வழக்குகளை நடத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு உத்தரவு முன்பே வந்திருக்கிறது அதனை அனைவரும் அறிந்து கொள்வதற்காக பதிவிட்டிருக்கிறோம் படித்து புரிந்து துணிந்து மாநாடு செய்தி குழுமத்தோடு துணையாக இருங்கள் மாற்றத்தை உறுதியாக நாம் உருவாக்குவோம் அரசின் ஆணை கீழ்கண்டவாறு:
தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு, அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக பொது தகவல் அலுவலர் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்வது வழக்கம்.
அவ்வாறான சூழ்நிலையில், இதுநாள்வரை பொது தகவல் அலுவலர் தனக்கு வாதாடுவதற்காக, அரசு வழக்கறிஞரையே நியமித்து கொள்வது வழக்கமாக இருந்தது.
இதனால் பொது தகவல் அலுவலருக்கு எந்தவித செலவினமும் ஏற்பட்டதில்லை.
தமிழக அரசானது Letter (Ms) No.16152/AR.3/2017-1 dated 16.06.2017 of Personal Administrative Reform (AR-III), Secretariat, Chennai-600 009-ன் படி, இனிமேல் பொது தகவல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தண்டணை விதித்தால் (பணத்தண்டம் அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக), பொது தகவல் அலுவலரானவர், தமிழக அரசு வழக்கறிஞரை தனக்காக வாதிட ஏற்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தகவல் ஆணையமயானது பொது தகவல் அலுவலருக்கு எதிராக தண்டணைகளுக்கான (பணத்தண்டம் மற்றும் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதது) ஆணைகளை பிறப்பித்தால், பொது தகவல் அலுவலர் அதை தனது சொந்த செலவிலேயே, தன் சார்பாக வாதிட வழக்கறிஞரை நியமித்து கொள்ள வேண்டும்.
ஆகவே, பொது தகவல் அலுவலர் முறையாக தகவல்களை மனுதாரருக்கு வழங்குவது என்பது தற்போது மிக அவசியமாகின்றது.
Sarıgöl su kaçak tespiti Tespit için gelişmiş ekipman kullanmaları etkileyiciydi. https://carolinahurricanesclub.com/read-blog/5577