மாநாடு 10 February 2022
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னையில் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அதிகாலை ஏறத்தாழ 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னதாக அலுவலகத்தில் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் அலுவலகத்தின் தரை பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டன.இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர் தேனாம்பேட்டையில் சேர்ந்த கர்க்கா வினோத் என தெரிய வருகிறது இவர் பணம் வாங்கிக்கொண்டு பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார். குற்ற வழக்குகளில் செயல்பட்டு வந்த இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்புதான் விடுதலையாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.