Spread the love

மாநாடு 7 October 2022

தஞ்சாவூரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கின்ற பர்மா பஜார் சாலை சிறியதாகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், சாதாரண நாளிலேயே இருக்கும்.

அதுவும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் , அதன்படி இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவிருக்கிற காரணத்தால் கடந்த ஒரு வாரமாகவே கூட்டம் அதிகமாக இருக்கிறது,

இந்த நேரத்தில் நான்கு சக்கர வாகனங்களும் ,மூன்று சக்கர வாகனங்களும் , பர்மா பஜார் சாலையின் இரு புறங்களிலிருந்தும் நேர் எதிரே வந்து விடுகிறது அதன் காரணமாக பெண்களும் ,முதியோர்களும், சாலை கூட்ட நெரிசலில் சிக்கி நெடுநேரம் அவதிப்படுகிறார்கள்,

போக்குவரத்தை சரி செய்யும் வேலையில் இருக்கின்ற காவலர்கள் சாதாரண நேரங்களில் ரோந்து வருகிறார்களாம், புதிய திரைப்படங்கள் அருகில் இருக்கின்ற திரையரங்கில் வந்தாலும், உண்மையிலேயே கூட்ட நெரிசல் அதிகமாக ஏற்படுகின்ற, இதுபோன்ற பண்டிகை காலங்களிலும் சுத்தமாக காவலர்கள் போக்குவரத்தை சரி செய்வதற்கும், ரோந்தும் வருவதே இல்லையாம்.

அதன் காரணமாக சரக்குகள் ஏற்றி வரும் வாகனங்களும், மகிழுந்துகளும் சர்வ சாதாரணமாக கூட்டம் நெரிசல் உள்ள நேரங்களில் இரு புறங்களில் இருந்தும் வந்து  விடுகிறது, நெரிசலில் மாட்டிக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது, உடனடியாக போக்குவரத்து காவலர்கள் இதனை சீர் செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்கள் , சரக்குந்துகள், இந்த சாலையில் வருவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்,

போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கு நமது மாநாடு இதழ் சார்பாகவும் இன்று அழைத்து தகவலும் தெரிவிக்கப்பட்டு விட்டது உடனடியாக இதனை சரி செய்வார்கள் என்று நம்புகிறோம். சரி செய்கிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

53000cookie-checkதஞ்சாவூர் பர்மா பஜாரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மக்கள் அவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!