Spread the love

மாநாடு 06 January 2023

வருகிற 24 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் சாலை மறியல் நடைபெறும் என்று ஏ ஐ டி யூ சி அறிவித்து, அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறது, இது சம்பந்தமாக தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏ ஐ டி யூ சி தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தஞ்சை மாவட்ட சங்க கூட்டரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமை வைத்தார். ஏ ஐ டி யூ சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் அகில இந்திய, மாநில குழு முடிவுகள் பற்றி விரிவாக பேசினார். மாவட்ட செயலாளரும், மாநிலச் செயலாளருமான ஆர்.தில்லைவனம் நடைபெற்ற வேலைகள் பற்றி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன் மாவட்ட துணை செயலாளர்கள் துரை.மதிவாணன், இரா.செந்தில்நாதன், ஆர்.பி.முத்துக்குமரன், காளிதாஸ் , துணைத் தலைவர்கள் அ.சாமிக்கண்ணு, ஜி.மணிமூர்த்தி, பரிமளா, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் மின்வாரிய சமையலறத்தில் மாநிலத் துணைத் தலைவர் போன் தங்கவேல் மாவட்ட நிர்வாகி சி.தண்டபாணி, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை, டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளர் என். செழியன் , நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ். தியாகராஜன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா, கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் பி.செல்வம் உள்ளிட்டோர் பக்கேற்றனர். கூட்டத்தில் ஒன்றிய மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத , தொழிலாளர் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. போராடி பெற்ற தொழிற்சங்க, தொழிலாளர் நல சட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 சட்டங்கள் நான்காக சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் , 240 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவும், அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 21,000 நிர்ணயம் செய்யவும் , ஓய்வூதியம் மாதம் ரூபாய் 6000 ம் வழங்கவும் , நலவாரிய செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் , நிதிபலன்களை அதிகரிக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

வருகிற ஜனவரி 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் , பட்டுக்கோட்டை , கும்பகோணம் ஆகிய மூன்று மையங்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து தொழிலாளர்களும் மறியல் போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்று வெற்றி பெறச் செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

60930cookie-check24 ஆம் தேதி தமிழ்நாட்டில் சாலை மறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!