மாநாடு 04 January 2023
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆலங்குளம் பகுதியில் உள்ள அண்ணா நகர் 3வது தெருவில் வாடகைக்கு வீடு பிடித்து வாழ்ந்து வந்திருக்கின்றனர் சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற திலீப் குமார் ஹேமலதா தம்பதியினர் இவர்களுக்கு ஹாசினி என்கின்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்திருக்கிறது.
சக்திவேல் அங்குள்ள காய்கறி சந்தையில் சுமை தூக்கும் வேலை செய்து செய்து வந்திருக்கிறார், இவரது மனைவி ஹேமலதா தாலுக்கா அலுவலகம் எதிரில் இருக்கும் துணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனிடையே ஹாசினி ஆறு மாதங்களிலேயே தன் சுட்டித்தனத்தால், அழகு மழலை மொழியில் அனைவரிடமும் பேசியதால் அந்தப் பகுதியின் செல்ல குழந்தையாக மாறி இருக்கிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ஹாசினி தவறி விழுந்து விட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சக்திவேல் தம்பதியினர் அனுமதித்திருக்கிறார்கள். இங்குள்ள மருத்துவ மனையில் முதலுதவி செய்துவிட்டு மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஹாசினி தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவரின் பெற்றோர்கள் யாரிடமும் சொல்லாமல் திடீரென தலைமறைவாகியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஆலங்குளம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் அந்த விசாரணையில் ஹாசினி இவர்களின் குழந்தை தானா என்றும் இவர்கள் கொடுத்த பெயர்கள் , கொடுத்த தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை ஹாசினி மரணம் அடைந்திருக்கிறது. குழந்தை ஹாசினி இறந்த பின்பும் பெற்றோர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது, மேலும் காவலர்களின் விசாரணை தொடர்கிறது.