Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இன்று பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள ராமானுஜர் சிலையானது இந்தியாவிலேயே மிகப்பெரிய சிலைகளில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது 5 உலோகங்களால் இந்த சிலை செய்யப்பட்டிருக்கிறது.இந்நிகழ்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவ்வாறு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம் தான் ராமானுஜரின் சிலை என்று முதல்வர் வாழ்த்து.

இது தொடர்பாக ஜீயருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்ததாவது:

ராமானுஜரின் சமத்துவக்குரல் நாடெங்கும் சிறப்போடும், எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் என்றும் சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என தெரிவித்துள்ளார்.

கோவில் கருவறைகளில் பூசை செய்வதிலும் சமத்துவத்தை உறுதி செய்துள்ளது ராமானுஜரின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களின் சிலை திறப்பு விழா வெற்றியடைய வாழ்த்து தெரிவிப்பதோடு இந்த சமத்துவ சிலையானது தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாக திகழ வேண்டும் என குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

15560cookie-check2வது பெரிய சிலை திறப்பு ஸ்டாலின் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!