தமிழக படகுகளை ஏலம் விட தொடங்கியது இலங்கை
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் தொடங்கியது.
தமிழ்நாட்டை சார்ந்த நாகை, ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சார்ந்த மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக 105 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அரசுடைமையாகியது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியது. அரசுடைமையாக்கப்பட்ட 105 படகுகளில் 65 படகுகளை காரை நகரில் ஏலம் விடுவது தொடங்கியுள்ளது.
நாளை காங்கேசன் துறைமுகத்தில் 5 விசைப்படகுகள் பிப்ரவரி 11ந்தேதி வரை ஏலம் விடப்பட உள்ளது.இன்று முதல் வரும் 11ந்தேதி வரை படகுகளை ஏலம் விடும் பணி நடைபெறும் என இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இலங்கை இந்தியாவின் நட்பு நாடு.