Spread the love

மாநாடு 13 June 2022

தமிழ்நாட்டில் விவசாயத்திற்காக இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் பல வாய்க்கால்களில், ஆறுகளில் முறையாக சரி வர தூர்வாரப்படாத காரணத்தால் வெள்ளாமை செய்யும் வயலுக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது, சில இடங்களில் தண்ணீரே வந்து சேர்வதில்லை எனவே வடிகால் வாய்க்காலை உடனடியாக தூர்வார கோரி கோரைப்புற்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:

தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்து வந்த வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிவதில் தேக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அவலம் உள்ளது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த வாய்க்கால்களை

மாவட்ட நிர்வாகம் தூர்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதர்மண்டிய கோரைப்புற்களுடன்
கோரிக்கை மனுவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன் வழங்கினார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.பாலு,ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

38680cookie-checkநூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை காப்பாற்றுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்

Leave a Reply

error: Content is protected !!