மாநாடு 20 December 2022
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கபிஸ்தலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேர்ந்த மாணவர்கள் கராத்தே சண்டை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன்.வட்டார கல்வி அலுவலர் ஜெகமீனா ஆகியோர் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி கராத்தே பயிற்சி பயிற்சியாளர் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டினார்கள்.
செய்தி.இராசராசன்
595250cookie-checkகபிஸ்தலம் பள்ளி மாணவர்களுக்கு பரிசு
