Spread the love

மாநாடு 14 June 2025

வட்டாட்சியர் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கி மாட்டி கெட்ட பெயரோடு நாள்தோறும் வலம் வருவதை செய்திகளின் வாயிலாக அறிந்து வரும் வேளையில் அற்ப லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில் புதிதாக இவரும் இணைந்துள்ளார் விபரம் பின்வருமாறு:


மயிலாடுதுறை மாவட்டம் கோவில்பத்து தாடாளன் கோவில் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்டர் தன் தாய் பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக சீர்காழி தாலுகா அலுவலகத்தில் உள்ள மண்டல துணை தாசில்தார் தேவகியை சந்தித்து மனு அளித்துள்ளார். தேவகி 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அலெக்சாண்டர் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின்படி பணத்தை அலெக்சாண்டர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த தேவகியிடம் கொடுத்துள்ளார். லஞ்சப் பணத்தை அலுவலகத்தில் இருந்த தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் டெல்பி வாங்கியுள்ளார். அப்போது
அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் டெல்பி மற்றும் தேவகி இருவரையும் கைது செய்தனர்.

81870cookie-checkதாசில்தார் கைது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!