மாநாடு 27 June 2025
சில மாநகராட்சி பில் கலெக்டர்கள் தாங்கள் தான் மாவட்ட கலெக்டர்கள் என்பது போல நினைத்துக் கொண்டு மக்களிடம் உங்களது கட்டடங்களுக்கு எவ்வளவு வரி போட வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அதை இதை சொல்லி நாங்கள் வரியை குறைத்து போட வேண்டும் என்றால் எங்களுக்கு இவ்வளவு தர வேண்டும் என்று பெற்றுக்கொண்டு வரியை குறைத்து போடுவதை வரிகட்டும் அனைவரும் அறிந்த ஒன்றே அவர்களில் சிலரின் சொத்துக்கள் பட்டியலை ஆய்வு செய்தாலே எவ்வளவு நேர்மையாக பணிகளை செய்து சம்பாதித்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் கட்டடங்களுக்கு வரியை குறைத்துப் போட்டு கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி வரி மோசடி செய்ததாக பில் கலெக்டர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், உசேன், ராஜேஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மதுரை கிழக்கு , வடக்கு ,மத்திய ,தெற்கு ,மேற்கு மண்டலங்களில் முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரிகள் குழுவை முந்தைய ஆணையர் நிமித்திருந்தார், 2024ஆம் பில் கலெக்டர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து 11 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருந்தது உதவியாளர் துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளின் பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி மண்டல தலைவர்கள் கவுன்சிலர்களின் வற்புறுத்தலால் முறைகேட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய கட்டடங்களுக்கு அவை அமைந்துள்ள மாநகராட்சி பகுதிக்கு ஏற்ப வரி விதிப்பு செய்யப்படும். ஒரு கட்டடத்திற்கு ஒரு முறை வரி விதித்தால் நீதிமன்ற உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்டம் தீர்மானத்தின் அடிப்படையில் தான் வரிவிதிப்பு குறைப்பு மேற்கொள்ள முடியும் என்பது விதி. ஆனால் வரிவிதிப்பு வசூல் தொடர்பாக 2024ல் தினேஷ்குமார் கமிஷனராக இருந்தபோது நடத்திய வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிமீறி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து உதவி கமிஷனர்கள் குழுக்கள் நடத்திய விசாரணையில் ரூ.1.50 கோடிக்கும் மேல் வரி வசூலில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டில் 13 பில் கலெக்டர்களுக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 11 பேருக்கு அப்போதைய கமிஷனர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டாருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.