மாநாடு 18 ஏப்ரல் 2023
கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா என்பவர் இருந்து வருகிறார் இவரின்

நேர்முக உதவியாளர் ரகோத்தமன் என்பவர் வீடு கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற வந்த பரணி என்பவரிடம் 20,000 ரூபாய் வாங்கியதையொட்டி கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடியாக ரகோத்தமனை கைது செய்தனர்.

மேலும் கடலூர் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிமம் பெற்று தரும் தனியார் நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
687520cookie-checkமேயரின் உதவியாளர் கைது ஆணையரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது
