மாநாடு 14 July 2024
தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம்தடதடக்கும் பாலம் . படபடக்கும் பயணிகள். அருகில் சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே
சுமார் நான்கு கோடி செலவில் கட்டப்பட்டு 2021 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மிகவும் மட்ட ரகமாக கட்டப்பட்டதால் மூன்றே ஆண்டுகளில் மிகவும் பழுதடைந்து விட்டது.
இதனால் அதில் பயணிக்கும் பயணிகள் பாலம் எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே பயணம் செய்கின்றனர். பாலத்தை பலமின்றி கட்டியதால் பலனின்றி போய்விடும் நிலை உள்ளது. எனவே பாலத்தை சீர்செய்து மக்கள் பயமின்றி பயணிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதிமுக அரசின் தரமற்ற பாலத்தை திமுக அரசு திருத்தி சரி செய்யுமா ?
742850cookie-checkதடதடக்கும் பாலம் படபடக்கும் பயணிகள்.