Spread the love

மாநாடு 23 July 2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக குரூப் 4 தேர்வுகள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேர்வு நடத்த திட்டமிட்டு கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது அதன்படி தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது.

அதனையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்போவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

44930cookie-checkநாளை பேருந்துகள் ஏன் திடீர் அறிவிப்பு
One thought on “நாளை பேருந்துகள் ஏன் திடீர் அறிவிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!