மாநாடு 16 July 2024
அடிதடி தொடங்கி அரிவாள் வெட்டுப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள் அடுத்த நிலைக்கு தொடர்ந்து போகாமல் இப்பிரச்சனையை தடுத்து அமைதி படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள் கீரமங்கலம் காவல் நிலைய காவலர்கள் விபரம் பின்வருமாறு:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மேலக்காடு, பகுதியில் வசித்து வருபவர் ஆமினாம்மாள்(வயது) 65/2024மற்றும் சாகுல்ஹமீது, 13/07/2024 மாலை வீட்டிற்கு cctv கேமரா பொருத்தி கொண்டு இருந்துள்ளார், அப்போது 1, ஷாஜகான் 2,முகமதுஅசன் 3, முகமது 4,காஜராஅம்மாள்5, பாத்திமா ஷைளா, 6,போதும்பொண்ணு7, ஷமிரா, 8,மஜ்னு, 9,அசன், 10,காசிம்11, பஹத் 12,கபீரா13, காசியத் ,பாத்திமா பீவி, ஆதல்,ஆகிய நபர்கள் அரிவாள், கம்பி ஆயுதங்களுடன் வந்தார்களாம்

நீங்கள் ஏன் எனது வீட்டிற்கு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார் சாகுல்ஹமீது உன்னை கொல்லாமல் விடமாட்டேன், என்று கூறினார்களாம் அதற்குள் இப்ராஹிம்ஷா மற்றும் முகமது ஆகிய நபர்கள் கொண்டு வந்த அரிவாளால் சராசரியாக தாக்கி உள்ளனர் நிலைகுலைந்த நிலையில் கணவரை தடுக்க வந்த


ஆமினாம்மாள் வயது 65 அவர் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு அங்கே வந்த 15 நபர்கள் கொண்ட கும்பல் தப்பிவிட்டார்களாம், அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 108ஆம்புலன்ஸ் மூலமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், தலையில் அரிவாளால் வெட்டிய இரத்த காயங்களுடன் சென்ற ஆமினாம்மாளுக்கு 10 தையல் தலையில் போட்டு தீவீர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார், அங்கேயும் விடாமல்சென்ற ஷாஜகான் மற்றும் முகமது ஆகிய இரண்டு நபர்களும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லி கொலை மிரட்டல் விட்டுள்ளனர் அதன் பின்னர் அங்கு இருந்த நோயாளிகள் அவரை வெளியே செல்லுங்கள் என்று தடுத்து மறித்து வெளியே அனுப்பினார்களாம் , அந்த மிரட்டல் சார்ந்து அறந்தாங்கி காவல் நிலையத்திலும் புகார்

செய்துள்ளார் அவரின் மருமகள் அதன் பின்னர் அமீனாம்மாள் வீட்டிற்கு வந்து ஒரு கும்பல் அவரின் வீட்டில் பொருத்தப்பட்ட cctv கேமரா க்களை திருடி சென்றுள்ளனர் அதுவும் கீரமங்கலம் காவல் நிலையத்தில்

புகார் அளிக்கபட்டுள்ளது இது போன்ற கொலை மிரட்டல் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது இதனை பலமுறை காவல் நிலையத்தில் புகாரும் செய்தும் நிரந்தரமாக சரியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க படவில்லைங்க அதனால் தான் அரிவாலுடன் துணிச்சலாக வந்து வெட்டி உள்ளனர் என்று கூறுகிறார்கள் பாதிக்கபட்ட நபர்கள் உரிய விசாரணை செய்து மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவாரா ? புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வந்தீதா பாண்டே . கீரமங்கலம் காவல் நிலைய காவலர்கள் ஆக்சனில் இறங்கி அமைதியை நிலவ செய்வார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்!
