Spread the love

மாநாடு 24 January 2024

கல்வியை மறுக்கும் போக்கு எந்த உருவில் வந்தாலும் அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை கல்வியின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் கற்று உணர்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும் .இதை நன்கு உணர்ந்த மாணவர்களான தஞ்சாவூர் அரசு மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் கீழ்க்கண்ட முழக்கங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர் அதன் விவரம் பின்வருமாறு

தேசத்தை பாதுகாக்க வேண்டும், கல்வியை பாதுகாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்திட வேண்டும்,நீட் தேர்வை தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் வே. அர்ஜுன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு.சந்துரு. கிளை நிர்வாகிகள் பிரேம்குமார், ஆகாஷ், ஜெனிபர்,சரோஜினி,தமிழரசன், ராஜதுரை,எடிசன்,ஜோஸ்வா, வீரராஜ், திலீப், ரமணா, ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர்.

72780cookie-checkதஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

error: Content is protected !!