Spread the love

மாநாடு 19 September 2022 பத்திரிகையாளர்களை தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா? நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

நாடறிந்த ஊடகமான நக்கீரனைச் சேர்ந்த பத்திரிகையாளர்களையே தாக்கி, அடக்குமுறைகளைப் பாய்ச்சி, அழுத்தங்களும், நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்றால், மாணவி மரணத்தில் என்னவெல்லாம் நிகழச் சாத்தியப்பட்டிருக்கும் என்பதை மக்களும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், நீதியரசர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இனிமேலாவது, தற்கொலை எனும் கோணத்திலேயே வழக்கின் விசாரணையைக் கொண்டு செல்லாது, நேர்மையான விசாரணையை நடத்தி, தொடர்புடையக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனவும், நக்கீரன் பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை கண்டறிந்து கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

டுவிட்டர் லிங்க் :https://twitter.com/SeemanOfficial/status/1571925603389157376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571925603389157376%7Ctwgr%5E881864b15841d8ca514bbf95248c46c1032784c9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.naamtamilar.org%2F2022%2F09%2Fseeman-condemned-attacking-journalists-and-trying-to-hide-the-facts-kallakurichy-school-student-srimathy-case%2F

50770cookie-checkநக்கீரன் இதழியலாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்
One thought on “நக்கீரன் இதழியலாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!