Spread the love

மாநாடு 09 June 2024

தஞ்சாவூர் ஞானம் நகரில் இன்று காலை 11:30 மணியளவில் நடந்த படுகொலை பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவாரூரை சேர்ந்த திமுக பிரமுகரான 48 வயதுடைய பாபு என்பவர் காரைக்காலில் டைமண்ட் எண்டர்பிரைசஸ் என்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை இவரது நண்பர் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த சங்கர் என்பவரின் புதுமனை புகுவிழாவிற்கு தனது பொலிரோ வாகனத்தில் மகன் பாலா 19/24 என்பருடன் 11.30 மணியளவில் தஞ்சாவூர் ஞானம் நகர் KVB வங்கி அருகே வந்த போது ஸ்கார்பியோ வாகனத்தில் வந்த நபர்கள் இவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்தி இரண்டு நபர்கள் பாபுவை அருவாளால் வெட்டி இருக்கிறார்கள் சம்பவ இடத்திலேயே பாபு இறந்திருக்கிறார்.

யார் கொலை செய்தார்கள் ? எதற்கு இந்த கொலை நடந்தது என்பதை தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். விரைவில் உண்மை உலகுக்கு தெரியவரும்.

73920cookie-checkதஞ்சையில் பயங்கரம் பட்டப் பகலில் படுகொலை
One thought on “தஞ்சையில் பயங்கரம் பட்டப் பகலில் படுகொலை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!