மாநாடு 12 August 2022
இன்று மாலை 4 40 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மங்களபுரம் சர்ச் அருகில் மருத்துவக் கல்லூரி சாலையில் இருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் நோக்கி தனது மனைவியை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த நிசார் அகமது வந்து கொண்டிருந்தார்.
மாலை நேரம் பள்ளிக்கூடங்கள் அலுவலகங்கள் விட்டு வருபவர்கள் கூட்ட நெரிசல்கள் சாலையில் கொஞ்சம் இருந்தது, இதுபோல நேரங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ,பயணிகள் ஆட்டோக்கள் போன்றவைகள் மிகவும் கவனமாக, பொறுமையாக இயக்க வேண்டும் ஆனால் நிசார் அகமது இருசக்கர வாகனத்தின் மீது பயணிகள் ஆட்டோ பின்புறமாக இரண்டு முறை மோதியிருக்கிறது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆட்டோ மோதியதால் கோபமடைந்த நிசார் அகமது தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆட்டோவை மறித்து ஓட்டுநரிடம் ஏன் இவ்வளவு வேகமாக வந்து மோதுகிறாய் பொறுமையாக வரக்கூடாதா என்று கேட்டிருக்கிறார் அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் தெனாவட்டாக இருந்த ஓட்டுநரை பார்த்து நிசார் அகமது ஆட்டோவை ஓரமாக நிறுத்துங்கள் போலீசை கூப்பிடுகிறேன் என்று கூறி ஆட்டோவின் சாவியை எடுத்திருக்கிறார், அந்நேரத்தில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆட்டோவை வேகமாக ஆக்சிலேட்டரை கொடுத்து நின்று கொண்டிருந்த நிசார் அகமது மீது வேகமாக மோதி கீழே தள்ளிவிட்டு விட்டு ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்று விட்டார் ஆட்டோ ஓட்டுநர். இச்சம்பவத்தை சற்றும் எதிர்பார்க்காத அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் அதிர்ச்சியோடு கீழே விழுந்து உருண்ட நிசார் அகமதை தூக்கினார்கள்.
இந்த கொடுஞ்செயலை செய்த ஆட்டோவின் எண் 78 53 என்று அருகில் இருந்த பலரும் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இந்நிகழ்வு அனைத்தும் அருகில் இருந்த சுசுகி ஷோரூம் இல் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு செயலை செய்த ஆட்டோ ஓட்டுனர் எந்த செயலையும் செய்ய தயங்காத மனசாட்சி அற்றவராக இருக்கக்கூடும் என்கிறார்கள் இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.