மாநாடு 13 February 2022
பஞ்சாபில் உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன.
பஞ்சாபில் வருகின்ற 20-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 14, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக பஞ்சாபில் உள்ள சுமார் 23 விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன.
விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. அனைத்திற்கும் மேலாக ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று BKU-Dakaunda இன் பொதுச்செயலாளர் ஜக்மோகன் சிங் பாட்டியாலா கூறினார்
175700cookie-checkபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு