மாநாடு 22 March 2022
சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் வந்து சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
காவல்துறையினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாக கூறியுள்ளனர். அனுமதியை மீறி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயல்பவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியுள்ள நிலையில், அனுமதியை மீறி முற்றுகையிட செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.