Spread the love

மாநாடு 21 April 2022

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயலில் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் கூடி மேளதாளங்களுடனும் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு அங்கே வந்த பொது மக்கள் உற்சாகமடையும் வகையில் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திருவிழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டி காலையிலேயே மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது. அதில் குதிரை வண்டி ஓட்டும் சாரதிகளும் மாட்டு வண்டி ஓட்டும் சாரதிகளும் அவர்களின் அசத்தலான வண்டிகளுடன் கலக்கலாக களத்தில் இறங்கினர்.

இந்தப் போட்டியில் குதிரை வண்டியில் 9 ஜோடிகள் பங்கேற்றது. இந்த குதிரை வண்டிகளுக்கு சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பந்தயத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் மாட்டு வண்டியில் 20 ஜோடி வண்டிகள் பங்கேற்று இருந்தது. அவை பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்டது. பெரிய மாடுகளில் 5 ஜோடி மாடுகளும், சிறிய மாடுகளில் 14 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.

அந்தப் போட்டியில் பெரிய மாட்டு வண்டிக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 8 கிலோமீட்டர் தூரமும் பந்தயத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. களத்தில் இறங்கிய மாடுகளும் குதிரைகளும் சீறிப் பாய்ந்தன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் அதனை ஒட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

திருவிழாவையொட்டி இந்த பந்தயம் நடைபெற்றதால் பல்வேறு ஊர்களில் இருந்து குவிந்த ஏராளமான மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் பார்வையாளர்களாக நின்று இந்த பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

31680cookie-checkமாட்டு வண்டி போட்டி சிறப்பாக நடைபெற்றது மக்கள் மகிழ்ச்சி

Leave a Reply

error: Content is protected !!