மாநாடு 04 February 2025
தஞ்சாவூர் மாநகராட்சியில் சிரிப்பு காட்டும் புதிய திட்டம் அறிமுகம்
தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும், எந்நேரமும் மக்களின் நடமாட்டம் இருக்கும் என்கிற புகழுக்கும், பெருமைக்கும் உரிய தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கால்நடைகள்
பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றுவதையும் , சாக்கடை கழிவுநீர் மக்களுக்கு நோய் பரப்பும் விதத்தில் பாதைகளில் வழிந்து
ஓடுவதையும் தடுத்து நிறுத்தி மக்களை காக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தனக்கு
கல்லா கட்டும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு மக்கள் நல்லா இருந்தால் என்ன
நோய்வாய்ப்பட்டால் நமக்கென்ன என்ற போக்கில் இருப்பதால் பல்வேறு அபாயகரமான அவல நிலை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நிலவி வருகிறதாம்.
இந்நிலையில் கடந்த மாதம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தமிழகத்திலேயே முதல் முறையாக அமுல்படுத்தப்படும் திட்டம் இது என்று தண்டோரா போடாத குறையாக தம்பட்டம் அடிக்கப்பட்டு ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது
இது பெரிய பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது . அந்த திட்டத்தை செயல்படுத்த திருச்சி பேருந்துகள் நிற்கும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது
அங்கு யாராவது சிறுநீர் கழித்தால் ஆம்புலன்சில் எழுப்பப்படும் ஒலியை போன்ற சத்தம் கேட்கும் இதனால் அங்கு சிறுநீர் கழிப்பது தடுக்கப்படும் இந்த மாபெரும் சாதனை திட்டத்தை தொடர்ந்து மற்ற இடங்களிலும் இதே போல திட்டத்தை அமல்படுத்தலாம் என்ற திட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மாநாடு செய்தி குழுமம் நேரடியாக சென்று பார்த்தபோது தான் தெரிந்தது .
வேலையில்லாதவன் குரங்கை பிடித்து பேன் பார்த்ததைப் போல இருக்கிறது தஞ்சாவூர் மாநகராட்சியின் இந்த திட்டம் என்று பயணிகள் நெடுந்தூரத்தில் இருந்து வருபவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் சிறுநீர் கழிக்க ஏற்றவாறு எந்நேரமும் தண்ணீரால் கழுவி தானே சுத்தம் செய்து கொள்ளும்படி சுகாதாரமான முறையில் , கழிவறையில் உள்ளே நிற்பவர்கள் வெளியே தெரியுமாறு ஏறக்குறைய 5 அடி உயரத்தில் சுவர் எழுப்பி தானியங்கி முறையில் செயல்படும் தரமான இலவச கழிப்பறையை
மாநகராட்சி நிர்வாகம் கட்டுவதை விட்டுவிட்டு எதற்கும் உதவாத இதுபோன்ற தேவையற்ற செலவினங்களை செய்வது எவ்விதத்திலும் பயனளிக்காது என்பதையே அங்கு நாம் கண்ட காட்சிகள்உணர்த்தியது .
பயணிகள் அவர்கள் பாட்டுக்கு சிறுநீர் கழிக்கிறார்கள் சத்தம் அது பாட்டுக்கு ரீங்காரமாய் அவர்களின் காதுகளில் ஒலிக்கிறது இதை பார்க்கும் பலருக்கும் சிரிப்புதான் வருகிறது. அரசு திட்டம் என்றால் அலங்கோலமாக இருக்கணும் என்பது சட்டமா என்ன ?
தரமான இலவச கழிப்பிட வசதி செய்து கொடுங்கள் . தவறுகள் தானே தடுக்கப்படும் . அதை விடுத்து மக்கள் வரிப்பணத்தை விரையும் செய்யாதீர்கள்.
ஆத்திரத்தை அடக்கலாம் மூ____த அடக்க முடியாது என்ற பழமொழி கூட நினைவு வரவில்லையா என்று தான் கேட்கத் தோன்றுகிறது இந்த திட்டத்தை சிந்தித்த அந்த சாரை…