மாநாடு 13 August 2022
தஞ்சாவூர் கட்டிடக்கலைக்கு மிகவும் புகழ்பெற்றது அது மட்டுமல்லாமல் நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர் தஞ்சாவூர், இவ்வாறு பல புகழ் வாய்ந்த தஞ்சாவூர் எழில் மிகு நகரமாக ஆக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது அதன் காரணமாக பல வேலைகள் நடைபெற போவதாக கூறி பல பகுதிகள் இடிக்கப்பட்டு, நோண்டப்பட்டு சாக்கடைகள் வெளியே ஓடும் சூழ்நிலையில் தற்போதைய தஞ்சாவூர் இருக்கிறது. நடப்பதற்கு கூட சரியான சாலைகள் இல்லை, இந்நிலையில் எழில் மிகு நகரமாக மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும், வீணாக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு பயன்படும் வகையான செயல்கள் பல இடங்களில் நடைபெறவில்லை,
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் நடைமேடை அமைப்பதும், சாலையே இல்லாமல் பலர் தடுமாறி கொண்டு இருக்கின்ற வேளையில் எதுக்குமே உதவாத விதமாக புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலைகளின் நடுவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகள், விலை உயர்ந்த கற்களும் அமைக்கப்படுகிறது.
ஏறக்குறைய ஒரு ஆண்டுகளாக பழைய திருவையாறு சாலை கரந்தை பூக்குளம் சாலைப் பகுதிகள், சோழன் நகர் பகுதி சாலைகள், மற்றும் பல ஆண்டுகளாக சாக்கடைநீரும், பன்றிகளும் ஓடி திரியும் பகுதிகளாக பர்மா காலனி செல்லும் பகுதி சாலைகள் இருக்கிறது, தஞ்சை தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, சாலைகளும் மாநகராட்சி நோண்டப்பட்டு அசுத்தமாக வேலைகள் முடிக்கப்படாமல் நோய் தொற்றும் அபாயம் உள்ள பகுதிகளாக தற்போது இருக்கிறது, இன்னும் இரண்டு மாதத்தில் மழைக்காலம் தொடங்கிவிடும்
அதற்கு முன்பாக இந்த பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் மாநகர தந்தை மேயர் சண். ராமநாதன், இந்த பணிகளை செய்து சாமானிய மக்களை காக்க வேண்டிய மேயர் இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் வருவதை தவிர்த்து விட்டு திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான படத்திற்கு முதல் காட்சிக்கு சென்று பார்த்து அதை தனது அலுவல் வேலை பட்டியலில் சேர்ப்பதும்,
கட்சிக்காரர்களின் இல்ல விஷேசங்களுக்கு செல்வதை அலுவல் பட்டியல்களில் போட்டு வருவதும் எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல என்கிறார்கள் பொதுமக்கள்.
மேலும் அவர்கள் கூறும் போது உதாரணமாக தஞ்சாவூரில் 36 வது வார்டு வரும் மேயர் 37 ,38 வது வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை தானே நேரில் வந்து பார்த்து சரி செய்வதை தவிர்த்து விட்டு பிரச்சினைகள் இல்லாத இடங்களுக்கு என்று அதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்கிறார், என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
எப்படியோ மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அனைவரும் சேர்ந்து சீர் கெட்டு கிடக்கும் தஞ்சாவூரை மழைக்காலத்திற்குள் சீரமைத்து மக்களை காக்க வேண்டும். காப்பார்களா கண்ணியமிப்பவர்கள்.
மக்கள் கூறிய கருத்து வீடியோ லிங்க் இதோ :https://youtu.be/1vdFBKJhw5w