மாநாடு 23 August 2022
சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி இருக்கிறது. அந்த நாயின் மேல் பேருந்து மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார்.
அதன் காரணமாக படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து வெளியே விழுந்துள்ளார், இதில் தலையில் பலமான காயம் ஏற்பட்டு இருக்கிறது, விபத்துக்குள்ளான நடத்துனர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்று கூறப்படுகிறது. இவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆம்புலன்ஸ் நெடு நேரமாகியும் வரவில்லை என்று கூறப்படுகிறது அதனால் அதே பேருந்தில் நடத்துனரை கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நடத்துனர் ராஜேந்திரன் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். இச்சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.