Spread the love

மாநாடு 25 February 2022

விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்திருந்த பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வரும் என்று தகவல் வெளியாகியது. கடைசியாக ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணையை விடுவித்தார்.

பிஎம் கிசான் திட்டத்தில் புதிய விதிமுறை வந்துள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பை முடித்தால்தான் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் நிதியுதவி வருவதில் சிக்கல் ஏற்படலாம். பிஎம் கிசான் வெப்சைட்டிலேயே இதற்கான வசதி உள்ளது. அது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இந்த லிங்கை தொடவும்

https://pmkisan.gov.in

Farmers Corner’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் e-kyc என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்றால் புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு ‘Get OTP ‘ பட்டனை கிளிக் செய்தால் ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு ’submit Submit For Authentication’ கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வளவுதான்.. வேலை முடிந்தது.

இதற்கு முன்னர் பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு ஆதார், வங்கிக் கணக்கு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் அவசியமாக இருந்தது. அதில் ஏதேனும் பிழை அல்லது திருத்தம் இருந்தால் பணம் சரியாக வந்துசேராது. ஆனால் இப்போது கேஒய்சி சரிபார்ப்பும் விதிமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது

21030cookie-checkவிவசாயிகள் உடனே இதை செய்தால் தான் பணம் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!