மாநாடு 27 May 2022
இந்தியாவில் 1956 க்கு முன் இருந்த தனியார் நிறுவனங்களான பாம்பே மியூச்சுவல் ஃபண்ட் போன்ற 56 நிறுவனங்களை ஒன்று சேர்த்து பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது தான் எல்ஐசி என்ற நிறுவனம். இதற்கு முன்பாகவே பல தனியார் நிறுவனங்கள் மக்கள் போட்ட பணத்தை ஏமாற்றி விட்டதாக கூறி அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் நட்டம் அடைய கூடாது என்பதற்காகவும் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம் தான் எல்ஐசி .இந்த நிறுவனத்தின் பங்குகளை சில வருடங்களாகவே விற்பதாக அரசு அறிவித்து கொண்டிருந்தது ,அப்போதே பலரும், எல்ஐசி ஊழியர்களும் இதனை எதிர்த்து வந்தனர் ,ஆனாலும் கூட கடந்த 4ஆம் தேதி எல்ஐசி பங்குகளை பட்டியலிட்டது .அதன்படி ஒரு பங்கின் விலை 949 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பலரும் இதில் ஆர்வத்துடன் முதலீடு செய்தார்கள் ஆனால் அவர்களுக்கு முதல்நாளிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது முதல் நாள் விற்பனையிலேயே ஒரு யூனிட் விலை 867 ரூபாய் என்று விற்பனை ஆகி முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் இந்த பங்குகள் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தார்கள் முதலீட்டாளர்கள். அதன் பிறகு சென்செக்ஸ் உயர்ந்த பிறகும் இந்தப் பங்குகளின் விலை உயரவில்லை.
இன்று ஒரு பங்கின் விலை 820 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் முடிவடைந்தது. இதன் காரணமாக எல்ஐசியின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 80 ஆயிரம் கோடி நட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இனியேனும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அது ஒரு அபாயகரமான முதலீடு என்பதை உணர வேண்டும். ஏனெனில் 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகள் பத்தாயிரம் ரூபாய் ஆனதும் இந்த மார்க்கெட்டில் தான் பல ஆயிரம் ரூபாய் இருந்த பங்குகள் பத்து ரூபாய்க்கு கூட விற்பனையாகாமல் போனதும் இந்த மார்க்கெட்டில் தான் என்பதை உணர்ந்து இதில் போடும் பணம் வந்தாலும் சரி போனாலும் சரி என்கிற பணத்தை மட்டுமே பங்குவர்த்தகத்தில் போட வேண்டும் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
