Spread the love

மாநாடு 8 June 2022

மத்திய அரசு ஆப்கா பேங்க் ஆப்கா துவார் என்கிற திட்டத்தின் மூலம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு 6000 ரூபாய் கொடுத்து வந்திருக்கிறது, அதனை 2000 ரூபாய் விதமாக மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் கொடுத்து வந்திருக்கிறது .இதன் மூலம் பிரதமர் கிசான் திட்டத்தின் பயனை விவசாயிகள் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

இந்தத் திட்டத்தால் பயன்பெறும் விவசாயிகள் அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப் படுவதால் வங்கிக்கு விவசாயிகள் நேரடியாக செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனையும் தற்போது மத்திய அரசு குறைந்துளளதாகவும் இனி பயன்பெறும் விவசாயிகள் வங்கிக்கு வரத் தேவையில்லை என்றும் தபால் துறையின் மூலம் பயன்பெறும் விவசாயிகளின் வீடு தேடி பணம் வந்து சேரும் என்றும் அறிவித்திருக்கிறது .இதனால் இனி விவசாயிகள் வங்கிக்கு அலையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கா பேங்க் ஆப்கா துவார்.

இந்தத் திட்டத்தில் எந்தவித முறைகேடுகளும் நடக்காமல் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் சேர வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளார்களாம்.

இதில் விவசாயிகள் பயன் பெற வேண்டுமெனில் கட்டாயமாக மே மாதம் 31ஆம் தேதிக்குள் இ கே ஒய் சி E-KYC செய்திருக்க வேண்டும் இதனை அவர்களின் செல்போன் மூலமும் செய்து கொள்ளலாம்.

இது செய்வது எளிதானதுதான் அதாவது ஆதார் கார்டு ,போன் நம்பரை சரிபார்த்து உறுதி படுத்துவது தான் இந்த கேஒய்சி என்பதாகும்.

இந்த அதிகாரப்பூர்வ இணையதளம் லிங்க் பயன்படுத்தி கேஒய்சி சரிப்பா பை பூர்த்தி செய்யலாம்.

லிங்க் இதோ :

https://pmkisan.gov.in/

38050cookie-checkவீடு தேடி வரும் 6000 ரூபாய் மத்திய அரசு அறிவிப்பு

Leave a Reply

error: Content is protected !!