மாநாடு 15 July 2022
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது, இதன் காரணமாக மாணவரின் தந்தை பள்ளிக்கு வந்து மாணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாணவரிடம் தந்தை விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது,
ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார், அங்கு பணிபுரியும் விடுதி காப்பாளர் ராஜ்குமார் என்பவர் இந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அதன் காரணமாக மாணவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது,
பாதிக்குள்ளான மாணவரை பரமக்குடி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள், விடுதிக்காப்பாளர் ராஜ்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் காரணமாக பள்ளியில் இருந்து விடுதி காப்பாளர் ராஜ்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நெல்லை மாவட்ட கல்வித்துறை ராஜ்குமார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் ராஜ்குமாரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள்.