Spread the love

மாநாடு 6 August 2022

கடந்த மாதம் 20ஆம் தேதி நெல்லை மாவட்டம் நந்தான் குளம் பகுதியில் 35 வயது உடைய ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்திருக்கிறது அதை மீட்டெடுத்த காவலர்கள் விசாரணையில் இறங்கி உள்ளார்கள் அதில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்திருக்கிறது.

அதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார் அங்கு தொழில் சரியில்லாத காரணத்தால் உழைத்து பிழைப்பதற்காக நெல்லைக்கு தனது மனைவி வினிதாவுடன் குடி பெயர்ந்து இருக்கிறார், இந்நிலையில் இவரது லாரியில் கிளீனராக வேலையில் சேர்ந்த தர்மராஜா என்பவருக்கும் ராஜாவின் மனைவி வினிதா விற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை கண்ட ராஜா தகராறில் ஈடுபட்டிருக்கிறார் அதன் காரணமாக கிளீனர் தர்மராஜா ராஜாவை கொலை செய்திருக்கிறார் உருவம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக எரித்திருக்கிறார். இருந்த நிலையில் இருந்த பிணத்தை ராஜாவின் மனைவி துணையோடு இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு தற்போது கண்டெடுக்கப்பட்ட பகுதியில் விட்டெறிந்து விட்டு வந்திருக்கிறார்கள்.

இவை அனைத்தும் ராஜா கொல்லப்பட்ட அதே மாதத்தில் அவரது மனைவி வினிதா காணாமல் போனதால் சந்தேகம் ஏற்பட்டு காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரித்ததில் இந்த சம்பவம் வெளி உலகத்திற்கு வந்துள்ளது.

காதல் என்பது தவறல்ல ஆனால் கள்ளக்காதல் தவறானது, அதேபோல இலவசம் என்பது தவறல்ல அதற்கு விலை இல்லா பொருள் என்று பெயர் வைத்தது தவறு, இவ்வாறாக சமீப காலமாக தங்கள் தவறை மறைப்பதற்காக பெயர்களை மாற்றி மறைக்க பார்க்கிறார்கள், அதன்படி தான் கள்ளக் காதலை கூட திருமணம் கடந்த உறவு என்கிறார்கள் கேட்டால் இதுவும் கூட ஒரு மாடல் என்பார்கள் இதையெல்லாம் முதலில் தவறு என்று மனம் வருந்தி திருந்த வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

46571cookie-checkபிழைக்க வந்தவர் எரிந்த நிலையில் கண்டெடுப்பு பகிர் தகவல்

Leave a Reply

error: Content is protected !!