Spread the love

மாநாடு 15 August 2022

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றார்கள், டெல்லியில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் முதல்வர்களும் இந்திய நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்கள்

அதன்படி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து விருது பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கினார்.

அதன் பிறகு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண்,

பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான் என்றார்,

ஒரே ஒரு இளைஞர் கூட தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்றார்.

அனைத்து மனிதநேய கொள்கைகளும் கொண்ட ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி அதைத்தான் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் மேலும் அவர் பேசுகையில்:

சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் வரலாறு நீண்ட நெடியது.எளிமை,நேர்மை,ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்; தமிழ் மண் தான் மகாத்மா காந்தியாக மாற்றியது.காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண்.

ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கப்போவதாக சென்னையில் தான் காந்தி அறிவித்தார். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய,அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக்கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.

சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர். இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு 2.6 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

அனைத்து காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்துச் செயல்படுத்தி வருகிறேன் இதற்கு காரணம் நான் மக்களோடு மக்களாக வளர்ந்தவன், மக்களால் வளர்க்கப்பட்டவன். பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்.

ரூ 2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம்; தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன்.

கட்டணமில்லாப் பேருந்து வசதி மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் அதிகமாகி இருக்கிறது; ஒராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது.

ஆளும்கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை, முதலமைச்சர் என்ற வகையில் அனைத்து தொகுதியும் எனது தொகுதிதான்,

ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக்கூடாது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி வருகிறேன்.

இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என வானத்தை நோக்கி பட்டொளி வீசிப்பறக்கும் தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்று பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

47370cookie-checkஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது முதல்வர் உறுதி ஏற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!