மாநாடு 15 August 2022
மக்கள் வரிப்பணத்தை எடுத்து தனக்குத் தேவைப்பட்டவர்களுக்கு சிலை வைக்க காத்திருக்கும் மனிதர்கள் வாழும் சமகாலத்தில், தனது தள்ளாத வயதிலும் வறுமை என்னை வளைந்து விட வைக்காது என்று வார்த்தையால் சொல்லாமல் வாழ்ந்து காட்டி கொண்டிருக்கும் மாமனிதர், சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் நல்லவர் ஐயா நல்ல கண்ணு அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 1கோடி ரூபாய் நல்ல கண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்டது அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை கட்சிக்கே திருப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு முதல் தமிழ் மண்ணுக்காக, மக்களுக்காக உழைத்ததற்காக உழைத்தவர்களுக்கு தலைசால் தமிழர் விருது தமிழக அரசால் வழங்கப்படும் என்று அறிவித்து இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.
தகைசால் தமிழர் விருது இந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாமனிதர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து அதன்படி இன்று விருதும் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது, அதனை பெற்றுக் கொண்ட நல்ல கண்ணு தான் சிறுக சிறுக நியாயமாக சேர்த்து வைத்த 5000 ரூபாயும் சேர்த்து 10 லட்சத்து 5000 ரூபாய் பணத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இதே போல தகைசால் தமிழர் விருது தொடங்கப்பட்ட முதல் ஆண்டான கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது அந்த 10 லட்ச ரூபாயையும் கொரோனா நிவாரண நிதிக்காக தமிழக அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வளரும் இளம் தலைமுறையினர் இவர்களை பார்த்து, இவர்களின் வாழ்க்கையைப் படித்து சிறந்து விளங்க வேண்டும் நடித்து ஆட்சியை பிடித்து தினந்தோறும் வெற்று விளம்பர காட்சிப்படுத்துபவர்களை புறந்தள்ள வேண்டும்.