Spread the love

மாநாடு  17 August 2022

சமீப காலமாக சாதி மதம் மற்றவர் என்று தங்கள் வாரிசுகளுக்கு சான்றிதழ் வேண்டும் என்று பலரும் விண்ணப்பம் செய்து வருகிறார்கள் ஆனால் இங்கு கல்வி வேலை வாய்ப்பு அனைத்தும் சாதி மதத்தை சார்ந்த வழங்குவதால் அப்படி சான்றிதழ் வழங்குவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறி அலுவலர்கள் சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது மகன் யுவன் மனோஜ்க்கு சாதி மதம் அற்றவர் என்கிற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார், சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மறுத்திருக்கிறார், அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார் அந்த மனுவில் தனது மகன் யுவன் மனோஜ் பள்ளியில் சேர்ப்பதற்காக படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்ததாகவும் அதில் சாதி மதம் என்கிற இடங்களை முழுவதும் நிரப்பி தாருங்கள் அப்போதுதான் பள்ளியில் சேர்க்க முடியும் என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டதாகவும் எனவே என் மகனுக்கு சாதி மதம் இல்லை என்கிற சான்றிதழை வழங்க நீதிமன்றம் ஆவண செய்து தரும்படி கோரிக்கை வைத்திருக்கிறார் .

இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் இப்படி சான்றிதழ் தருவதில் எந்தவித ஆட்சேபனையும் அரசுக்கு இல்லை என்று கூறியிருக்கிறார், இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்னும் இரண்டு வாரத்துக்குள் யுவன் மனோஜ்க்கு சாதி மதம் அற்றவர் என்கிற சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறது.

47470cookie-checkசான்றிதழை 2 வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!