மாநாடு 17 August 2022
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள வானகரத்தில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்கள் இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர்கள் கூட்டிய இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து வழக்கு தொடுக்கப்பட்டது,
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10, 11 ஆம் தேதிகளில் விசாரணை நடந்தது,
பொதுக்குழு குறித்து ஜூன் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால், தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஈபிஎஸ் தரப்பு, 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது , என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும்பொதுக்குழு குறித்து ஜூன் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஈபிஎஸ் தரப்பு, 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது , என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் கூறியது இரண்டாயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக, கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது
ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.. கூறியது இரண்டாயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக, கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும், என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்தத் தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் தரப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.