மாநாடு 18 August 2022
இன்று காலை ஏறக்குறைய 10 மணியளவில் தஞ்சாவூரின் முக்கிய பகுதியான கீழவாசலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காமராஜ் மார்க்கெட் அருகிலுள்ள கண்ணையன் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் தீ பற்றி இருக்கிறது, இதனை கண்ட டீ மாஸ்டர் சிலிண்டரை பயத்தில் வெளியே தூக்கி வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.
சிலிண்டரில் எரிந்த தீ கடையின் வெளியே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களில் பற்றி எரிந்து இருக்கிறது இதனை கண்ட மக்கள் பீதியில் சத்தம் போட்டு இருக்கிறார்கள். அதன் காரணமாக மேலும் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து எடுத்து இருக்கிறார்கள்.
ஆனாலும் டீ மாஸ்டரின் அப்பாச்சி வாகனம் முற்றிலும் எரிந்து விட்டது,
அதன் அருகே இன்னொரு வாகனமும் முழுவதும் எரிந்த நிலையில் இருக்கிறது இந்த தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்திருக்கின்றார்கள் அவர்கள் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்த காரணத்தால் சிலிண்டர் வெடிக்காமல், வாகனங்களும் வெடித்து விடாமல் பெரிய விபத்து நடக்காமல் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது,
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்வதற்காக காவல்துறையின் தடையவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர், இதனால் அந்தப் பகுதியே மிகவும் பரபரப்புக்குள்ளானது.