Spread the love

மாநாடு 23 August 2022

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் உள்ள சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் அமுதா. இவரின் இளைய மகள் 20வயதுடைய இவர் உமாகெளரி பல்பொருள் அங்காடியில் பணி செய்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பணிக்கு சென்ற உமாகெளரி, முன் கூட்டியே வீட்டுக்கு வந்துள்ளார். மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த உமா கெளரியின் சகோதரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வீட்டினுள் உமாகெளரியும், மருங்கூா் இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் 20வயதுடைய வேணுமோகனும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனைக் கண்ட உடன் உமா கெளரியின் சகோதரி தனது தாய்க்கும், காவலர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காவலர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த உமாகெளரியும், வேணுமோகனும் காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு எதிா்ப்பு கிளம்பியதால் மனமுடைந்த காதல்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

48170cookie-checkஒரே சேலையில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!