Spread the love

மாநாடு 20 June 2025

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியை உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் விமர்சிக்கும் போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்களின் ஆட்சியின் திறனை பற்றி கூறும்போது பல இடங்களில் நான்காண்டு ஆட்சி இதுவெல்லாம் சாட்சி என்று அடுக்கு மொழியில் தன் தந்தையைப் போலவே பேசி வருவதை பலரும் பல நிகழ்ச்சிகளில் பார்த்து வருகிறோம் ஆனால் உண்மை நிலை அப்படியா என்று ஆழ்மனதை அழுத்தி கேள்வி எழுப்பினால் கிடைக்கும் விடை: making , acting, shooting என்கிற போக்கில் ஆட்சி நடப்பதை மக்கள் noting செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் அதற்கு உதாரணமாக 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில்

திருவண்ணாமலையில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் மழையில் கரைந்து போனதையும், தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில்

கட்டப்பட்ட பாலம் 10 நாளில் இடிந்து உள்வாங்கியதையும்.. இதுபோல ஊருக்கு ஒன்றல்ல, பேருக்கு சொல்ல பத்தல்ல ஒவ்வொன்றாக சொல்லிக் கண்டே போனால் நிறுத்தம் இல்ல என்கிற மாதிரி அவலங்கள் நீண்டு கொண்டே செல்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

திமுக ஆட்சி அமைந்ததும் போர்க்கால அடிப்படையில் ஆறுகள் தூர்வாரப்படும் என்ற அறிவிப்போடு நிறுத்தி விடாமல் நேரடியாக தஞ்சைக்கு வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளியஅக்ரஹாரம் பைபாஸ் சாலையில் நின்று கொண்டு வெண்ணாற்றில் தூர் வாருவதை பார்வையிட்டார்,

அந்த ஆண்டு மட்டும் அல்லாமல் அடுத்த ஆண்டுகளும் அதே போல வந்து பணிகளை பார்வையிட்டார் ஆனாலும் முதல்வருக்கே விபூதி அடிக்கின்ற வகையில் தான் உண்மையில் தூர்வாரப்பட்டது என்பதற்கு தற்போது உள்ள நிலையும் , ஒவ்வொரு ஆண்டும் மாநாடு செய்தி குழுமத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி காட்சியே சாட்சி. 

வழக்கம் போல இந்த ஆண்டும் தஞ்சாவூருக்கு நலத்திட்டங்களை பார்வையிடவும், நிறைவடைந்ததாக கூறப்பட்ட அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் கட்டிய கட்டடங்களை திறந்து வைப்பதற்காகவும் இரண்டு நாள் பயணமாக ஜூன் மாதம் 15 ஆம் தேதி 16ஆம் தேதி தஞ்சைக்கு வருகை தந்திருந்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது 16ஆம் தேதி கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயில் பகுதியில் அண்ணன் மறுமலர்ச்சி திட்டத்தில் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 19ஆம் தேதி அதாவது திறக்கப்பட்ட 3 நாளில் அந்தக் கட்டடத்தின் மேற்கூரையின் உள் பூச்சி பெயர்ந்து விழுந்துள்ளது

பொது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தில் இருந்து இங்கு இன்னுமும் இடம் பெயராமல், மக்கள் புழக்கம் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்களோ , உயிர் சேதங்களோ ஏற்படாமல் இருந்திருக்கிறது. 

இதுபோல நடந்து விடக்கூடாது என்று தடுப்பதற்காக திட்டமிட்டு பல சட்டங்கள் நமக்காக இயற்றப்பட்டு இருக்கிறது ஆனால் இந்த சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா என்பதையே நாம் அறியாததால் தான் இது போன்ற பல அவலங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அரசு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதாலோ, அரசின் திட்டம் என்பதாலோ ஆட்சியாளர்கள் அவர்களின் சொந்த பணத்தில் செயல்படுத்தும் திட்டம் என்று கருதி கொள்ளக் கூடாது மக்கள்.  அதே போல அரசு அலுவலர்களும் நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நம் பணியாளர்கள் தான் என்பதை மறந்து இருந்துவிடக்கூடாது என்பதற்காக தான் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அதன் பணிகள் அதன் பணியாளர்கள் பெயர்கள்  உள்ளிட்ட அனைத்து விபரத்தையும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் விதத்தில் அரசு அந்த அலுவலகங்களில் மட்டுமல்ல எந்த அலுவலகங்களாக இருந்தாலும் 4(1)(b) ன்கீழ் வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்கிறது சட்டம்.

அதேபோல எந்த வேலை நடந்தாலும் அதனை வகுத்து தருவதற்கும், கண்காணிப்பதற்கும் பிறகு அந்தப் பணியின் தரத்தை ஆய்வு செய்து ஆய்வு செய்து தரச்சான்று தருவதற்கும் பணியாளர்கள் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது இப்படி எப்படி ?

மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டு அலுவலர்களின் கவனக்குறைவால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு யாருக்கேனும் உயிர் சேதம் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது IPC 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 10 வருடம் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்கிற போது திட்டத்தை முறையாக செய்யாதவர்கள் மீது அதனை திறம்பட ஆய்வு செய்யாதவர்கள் மீது தயவு தாட்சனையின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்கும்.

இதனை எல்லாம் முழுமூச்சாக களைவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்பவர்களுக்கு அரசு அலுவலகங்களில் இருந்து தகவல் தர மறுத்து 2(F)ல் பதிவுருக்கள், ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், ஆலோசனைகள், செய்தி வெளியீடு, சுற்றறிக்கைகள், ஆணைகள், பயணக் குறிப்பேடு, ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், தகவல்கள் தான் 2(F) என்று கூட தெரியாத பொது தகவல் அலுவலர்களும், தெரிந்தும் தெரியாதது போல இருந்து கொண்டு இந்த தகவல் தர இயலாது என்று தகவல் தருவதையும் காண முடிகிறது . அதேபோல 8(1)(J) ,8,9,11, இந்தப் பிரிவுகளை குறிப்பிட்டு காட்டி தனிநபர் தகவல் தர இயலாது என்ற தகவலும் பரவலாக கொடுக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது சட்டத்தில் ஒருவரின் அந்தரங்கத்தை தான் கேட்கக் கூடாது , தகவல் தரக் கூடாது என்று உள்ளது அதிலும் ஏன் தரக்கூடாது என்று மூன்றாம் நபரிடம் அதாவது சம்பந்தப்பட்ட நபரிடம் எழுத்துப்பூர்வமாக அவர்களின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக பெற்று தகவல் கோரி இருக்கும் மனுதாரருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரவேண்டும் என்று சட்டத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி சட்டத்தின் வழி நின்று  தட்டிக் கேட்காமல் பலரும் இருப்பதால்தான் நாம் அரசு பணியில் இருக்கிறோம், மக்களுக்கு அரசால் பணிக்கப்பட்ட பணிகளை செய்ய இருக்கிறோம் என்பதையே மறந்து தங்களை மன்னர் போல எண்ணிக் கொண்டு சிலர் சொத்து வாங்கி குவிப்பதையும் , சுகபோகமாக வாழ்வதையும் வாடிக்கையாக பலர் வைத்திருப்பதை இனியேனும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று வெகுமக்கள் வெகுண்டு எழுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் மக்களின் பணத்தை மனசாட்சியோடு சட்டத்துக்கு பயந்து திட்டத்தை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதனை சரியாக முறையாக பின்பற்றாததும் ஒரு காரணம் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் மகிழ்ச்சியாக

கைத்தட்டி திறக்கப்பட்ட கட்டடம்… கை கொட்டி சிரிக்கும் அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து திருந்தும் விதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா பார்ப்போம்…

காரணமானவர்களை கண்டறிந்து ஊரறிய செய்ய மாநாடு செய்தி குழுமம் சட்டத்தின் படி தகவல்களை சேகரிக்க இறங்கியுள்ளது முழுமையான தகவல்கள் சமூக ஆர்வலர்களின் பேட்டி அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு, புலனாய்வு இதழில், மாநாடுTVல் விரைவில்..

82060cookie-checkமுதல்வரால் கைத்தட்டி திறக்கப்பட்டது ! மக்களால் கை கொட்டி சிரிக்கப்படுகிறது காரணம் யார் ?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!