மாநாடு 25 June 2025
தன் தேவையே போதும் என்று நினைத்து மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை நாம் என்கிற மிதப்பில் இருக்கும் சில செயலற்ற அரசு அலுவலர்களால் சாமானியர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல சாலைகள் கூட ஒழுங்கற்ற முறையில் இருப்பதற்கு ஒழுக்கமற்ற அந்த அலுவலர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்பதற்கு பல்வேறு காட்சிகளை சாட்சிகளாக கண்முன் நிற்கின்றது செய்திகளிலும் வருகின்றது ஆனாலும் ஊராருக்கு தானே இதெல்லாம் என்று உதிர்த்துவிட்டு அலையும் சில பொறுப்பற்ற அலுவலர்களுக்கு காட்டமாக எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருப்பதாவது :
திருச்சி மாவட்டம் புங்கனுார் டேனியல் சிமியோன் சுதன் தாக்கல் செய்த மனுவில்
புங்கனுாரில் கட்டட திட்ட வரைபட அனுமதியின்றி ஒரு அரிசி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றக்கோரி கலெக்டர், ஸ்ரீரங்கம் தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன். அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுள்ளது என்பதை அதன் உரிமையாளர் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. வரன்முறைப்படுத்துதல் மூலம் இச்சட்டவிரோதத்தை சரிசெய்ய முடியும் என கூறுகிறது.
நகர் புறம் மற்றும் கிராமப்புறங்களில் சட்ட விதிகளின் படி உரிய அதிகாரிகளிடமிருந்து கட்டட திட்ட அனுமதியை பெற்ற பின்னரே கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும்.
அனுமதியற்ற மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை வழக்கமான நடைமுறைகள் படி அதிகாரிகளால் வரன் முறைப்படுத்த முடியாது.
<span;>வரன்முறைப்படுத்துதலை உரிமையாக கோர முடியாது. அனுமதியற்ற கட்டுமானங்கள் மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயலற்ற தன்மையை நீதிமன்றங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சட்டவிரோத அனுமதியற்ற கட்டுமானத்தை வரன்முறைப்படுத்துவது ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு வழிவகுக்கும். ஒவ்வொருவரும் அனுமதியற்ற கட்டுமானத்தை அமைத்துவிட்டு பின்னர் வரன்முறைப்படுத்த கோரி விண்ணப்பிப்பர். இதனால் சட்டம் விதிகளின் நோக்கம் தோற்கடிக்கப்படும். விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள போதிலும் அதிகாரிகள் அமைதியாகவே இருக்கின்றனர் அவர்களின் செயலற்ற தன்மை தொடர்கிறது. சட்டவிரோத கட்டுமான வழக்குகளை கையாளும் போது கடுமையான அணுகுமுறை வேண்டும். வரன்முறைப்படுத்துவதை உடனடியாக அனுமதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க உயர்நிலை கண்காணிப்புக் குழுவை அமைத்து. 2024 மார்ச் 1ல் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டது. இக்குழு அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுதல், கட்டடங்களை தவறுதலாக வணிக நோக்கத்திற்காக மாற்றுவதை தடுத்தல், விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி செயல் திட்டம் தயாரிக்கும். விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்தல் சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அளித்தல் , அக்கட்டடங்களை அகற்றுதல், பூட்டி ‘சீல்’ வைக்க உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். மாதம் ஒருமுறை கூடி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது இக்குழுவின் பணி.
உயர்நிலை கண்காணிப்புக் குழு, அரசின் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை மேற்கொள்கிறதா என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை.
குழு திறம்பட செயல்படாவிடில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நோக்கம் பயனற்றதாகிவிடும். உயர்நிலை கண்காணிப்புக் குழு மாதம் ஒருமுறை கூடி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதை தமிழக தலைமை செயலர் உறுதிசெய்ய வேண்டும். குழு செயல்பாடுகளை அரசு அவ்வப்போது கண்காணித்து அரசின் உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் அனுமதியற்ற கட்டுமானம் என அடையாளம் காணப்பட்டால், சட்ட நடைமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் பல கட்டடங்கள் அப்படிதான் இருக்கிறது இதை முறைப்படுத்த பல முறை மக்களின் நலன் காக்க மாநாடு செய்தி குழுமத்தில் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டு இருக்கிறோம். நகர அமைப்பு அலுவலர் (TPO) அழைத்து பேசி இருக்கிறோம் பயனில்லை என்ற பிறகு RTIல் தகவலாக சட்டப்படி கேட்டிருக்கின்றோம் மாநகராட்சி தரப்பில் இருந்து தகவல் தந்த பிறகு அல்லது தகவல் தர மறுத்த பிறகு நீதிமன்றத்தின் மூலம் மக்களுக்கான திட்டங்களை திறம்பட (அரசு அலுவலர் கடமை தவறினால் , சட்டத்தை மதிக்காமல் இருந்தால், அலுவலரின் அலட்சியத்தால் விபத்துக்கள் காயங்கள் மரணங்கள் ஏற்படும் அபாயம் இருந்தாலே அந்த அலுவலரை தண்டிக்க முடியும் “BNS 198, 199, 106, 106(A) G.O 540 , போன்ற )
சட்டத்தின் துணை கொண்டு நிறைவேற்றுவோம். உங்கள் ஊரில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் நமக்கு ஆதாரங்களுடன் தெரியப்படுத்துங்கள் முறையான செய்தி என்றால் மறைவில்லாமல் வெளியிடும் மாநாடு..