Spread the love

மாநாடு 7 March 2022

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகள் கடந்த 22ஆம் தேதி என்ன பட்டது அதில் சுயேட்சை வேட்பாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வேட்பாளரும் ,தலா 284 வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இதில் யார் வெற்றி பெற்றார் என்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குழுக்களில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.அதை மாற்றி திமுகவின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அங்கிருந்த அதிகாரி அறிவித்திருந்தார். அதை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் நீதிமன்றம் சென்று இருந்தார் இந்த செய்தி நமது மாநாடு இதழில் அன்றைய தினமே வெளியிடப்பட்டிருந்தது.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விவரம் வருமாறு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி, சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி என்பவர் போட்டியிட்டனர். இருவரும் தலா 284 வாக்குகள் வாங்கியிருந்த நிலையில், குலுக்கல் முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி வெற்றி பெற்றதாக அறிவித்த, சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தனது வெற்றி பறிபோனதாகவும், திமுக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்துவிட்டு, தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பழனிசெல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் கட்சி சார்பில் செயல்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவை மாற்றி அறிவிக்கக்கூறி அழுத்தம் தந்தது யார் உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி தாக்கல் செய்த வழக்கை 10 நாட்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

23290cookie-checkதிமுக அழுத்தம் அறிவிப்பு மாற்றம் நீதிமன்றத்தால் வேலை இழக்கும் அதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!