மாநாடு 20 February 2022
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் கள்ளகிணறு அருகே திருநெல்வேலியிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. திடீரென பேருந்தில் இருந்த முன்பகுதி சக்கரம் பேருந்திலிருந்து கழன்று தனியாக பேருந்துக்கு முன் கழன்று ஓடியது.
இதை கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சக்கரமானது கொஞ்சம் தூரம் சென்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தது.சக்கரம் தனியாக கழன்று ஓடியதை கண்ட பேருந்து ஓட்டுனர் காமராஜ் சமயோஜிதமாக யோசித்து ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி பேருந்தை சாலையோரம் நிறுத்தினார்.இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடுவழியில் சிக்கித்தவித்த 47 பயணிகளையும் மாற்று பேருந்து மூலம் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பாதி வழியில் விபத்தாகி நின்ற பேருந்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் சீர் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று சாலையில் நின்ற இரு சக்கர வாகனத்தில் மோதி சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.