மாநாடு 1 August 2022
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ம் தேதியோடு சென்ற 1ஆண்டுக்கான வருமான வரி செலுத்துபவர்களின் கணக்குகள் முடிந்துவிடும். அந்த வரவு, செலவு கணக்கு விவரங்களை ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி செலுத்துவோர் தாக்கல் செய்து எவ்வளவு வரி செலுத்த வேண்டி இருக்கிறதோ அதனை செலுத்தி விட வேண்டும்.
ஜூலை மாதம் 31ம் தேதி தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தினால், அபராதம் விதிக்கப்படும், அபராதத்தை தவிர்ப்பதற்காக கடைசி நாளில் லட்சகணக்கானோர் வருமான வரியை தாக்கல் செய்தனர்.கடைசி சில மணிநேரங்களில் மட்டும் 14 லட்சம் பேர் வருமான வரியை தாக்கல் செய்து இருந்தார்கள் .
அதனை ஒவ்வொரு மணிநேரமும், வருமான வரித்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. இரவு 7 முதல் 8 மணி வரையிலும் 4,95,505 பேர் தாக்கல் செய்தார்கள். 9 மணி முதல் 10 மணி வரையில் 4,60,496 பேர் தாக்கல் செய்தனர். அதன் பிறகு 10 மணி முதல் 11 மணி வரையில் 4,50,013 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். இதனால் மொத்தமாக நேற்று ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட 67.9 லட்சம் பேர் வருமான வரிக்கணக்குளை தாக்கல் செய்துள்ளனர்.
