Spread the love

மாநாடு 18 February 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திமுகவுக்கு தாவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டு அதிமுக வேட்பாளர் பழனிவேல் என்பவர் இன்று திடீரென்று திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் திடீரென திமுகவில் இணைந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது அதிமுக வேட்பாளர் பழனிவேல் ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளார்களாம்.

18820cookie-checkபரபரப்பு திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!