மாநாடு 30 June 2026
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மண்ணை விட்டு உடலால் மட்டும் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்டி எழுப்ப வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார் அதன் விபரம் பின்வருமாறு:

இமயத்தைப்
புதைத்த இடம் இதுதான்
தூங்கு ராஜா தூங்கு
ஓடி ஓடிக் களைத்தவனே
கலையாத உறக்கத்தில்
கனவுகளற்ற உறக்கத்தில்
ஓய்வுகொள்
மண்ணை இழுத்துப் போர்த்துப்
படுத்திருக்கும் உன்னை
குளிரோ மழையோ
வெயிலோ புயலோ
ஒன்றும் செய்யாது
நலம் கேட்க வந்த நான்
நல்லசெய்தி
கொண்டுவரவில்லை
இதே இடத்தில்
என்னோடு நின்று
இறுதி மரியாதை செலுத்திய
உன் சீடன்
உனைத்தேடி வந்துவிட்டான்
ஜோடிக் குதிரைகளை இழந்து
கவிழ்ந்து கிடக்கிறது
கலைத்தேர்
கடமை இருக்கிறது
இந்த மண்ணகத்தில்
உனக்கொரு மணிமண்டபம்;
அரசுக்குக்
கோரிக்கை வைக்கிறேன்
முதலமைச்சர் விஜயைச்
சந்திக்கவும் தயங்கமாட்டேன்
இந்த இடம்
கலைக்கோயிலாக
என்று கட்டப்படுமோ
அன்று
தேனி மாவட்டம் முழுக்க
தேவர்கள் பூச்சொரிவர்
