Spread the love

மாநாடு 27 June 2022

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள் உறவினர்களுக்கு முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வு நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணி, 4 ஐஏஎஸ் அதிகாரிகள், உட்பட 12 அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த ஊழல் வழக்கில் விசாரணை நடத்தி 10 வாரங்களில் விசாரணை அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது, அதன் விசாரணை இன்று வந்தது .இந்த ஊழல் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் திமுக ,லஞ்ச ஒழிப்புத்துறை, அறப்போர் இயக்கம், பதிலளிக்க உத்தரவிட்டு ஜூலை 25ஆம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.

40440cookie-checkஎஸ்.பி.வேலுமணி கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!