அதிமுகவில் 6 பேரின் பதவிகள் பறிப்பு-ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு
திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர்.
இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கம் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும்,
P. காஞ்சனா, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு உறுப்பினர்
R. அன்னபூர்ணம், ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர்
K.M. பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியக் குழு 7-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர்
M.பழனிவேல், ஊராட்சி ஒன்றியக் குழு 9-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி
G. செந்தில்வடிவு, ஊராட்சி ஒன்றியக் 11-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர்
R. ஸ்டாலின், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.